பிந்திய பதிவுகள்
Loading...
Thursday, October 24, 2013

Info Post

boat-in-a-serene-sea-horacio-cardozo ஒருவர் திருமணமாகி தன் அழகான மனைவியுடன் கடல் வழியாக திரும்புகிறார். கடலில் அலைகள் ஆர்பரிக்கின்றன, இடியும் மின்னலுமாய் இருக்கிறது. படகு ஆடுகிறது. அவரின் மனைவி நடுங்குகிறாள்.
அமைதியாய் புன்னகையோடு படகை செலுத்தும் கணவனை பார்த்து அவள் கேட்கிறாள்

"உங்களுக்கு பயமாக இல்லையா"

என்று. கணவன் ஒன்றுமே சொல்லாமல், தன் உறையிலிருந்து ஒரு கத்தியை எடுத்து அவள் கழுத்தில் வைக்கிறார். அவளோ பயப்படாமல் சிரிக்கிறாள்.
கணவன்

"இந்த கத்தி, பயங்கரமானது, உன்னை வெட்டிவிடும், நீயோ சிரிக்கிறாயே ?"

என்று. அதற்கு அவள் சொல்கிறாள்

"கத்தி பயங்கரமானதுதான் , ஆனால் அதை வைத்திருப்பவர் என் அன்புக்குரியவர் அதனால் பயமில்லை"

என்று. கனவன் புன்முறுவலோடு,

"இந்த அலைகளும், இடைகளும், மின்னல்களும், பயங்கரமானவை. ஆனால் அவற்றை தன் வசம் வைத்திருக்கும் இறைவன் , என் அன்புக்குரியவன் . அதனால் எனக்கு பயமில்லை என்றார்...!

0 comments:

Post a Comment