இனம் , மொழி , கலாச்சாரம் வேறுயென்றாலும் தாய் உள்ளம் ஒன்றே...!
கிறிஸ்டினா சிமோஸ்...அமெரிக்காவில் வசிப்பவர். இவர் வசித்து வந்த அப்பார்ட்மென்டில் கடந்த வாரம் தீப்பற்றிக் கொண்டது.
தன் வீட்டிலும் பத்தடி தூரத்தில் நெருப்பு எரிவதை கண்ட கிறிஸ்டினா, தன் 18 மாத குழந்தையை தூக்கிக்கொண்டு இரண்டாவது மாடியில் இருந்து கீழே குதித்தார்...,இதில் அவருக்கு முதுகுக்த்தண்டில் பலத்த காயம் ஏற்பட்டது .,மருத்துவர்கள் அவர் இனி எழுந்து நடக்க முடியும் என்பது சந்தேகமே என்று கூறிவிட்டனர்.,இதில் ஆச்சரியம் என்னவென்றாள் அவரது 18 மாத குழந்தை கேமரூனுக்கு சிறு காயம் கூட ஏற்படவில்லை.
“குதிப்பதற்கு முன் என் குழந்தையை கட்டி முத்தமிட்டு “நான் உன்னை விரும்புகிறேன்” என்று கூறினேன்.,என் குழந்தையை காப்பாற்றவேண்டும் என்ற என்ணத்தை தவிர வேறு ஒன்றும் என் மனத்தில் தோன்றவில்லை..,என் வாழ்நாள் முழுவதும் எழுந்து நடக்க முடியாமல் போனாலும் என் குழந்தை என்னுடன் இருப்பதை நினைத்து நான் சந்தோசம் அடைவேன்" என்று கூறுகிறார் .,
0 comments:
Post a Comment